26.08.19 இன்று: போக்குவரத்துத்துறையின் பொற்காலம்:
மின்சார பேருந்துகள் துவக்கம்:
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை சுற்றுச்சுழலை பாதிக்காத வகையில் மின்சாரத்தில் இயங்கும் மின்சார பேருந்தை
மாண்புமிகு தமிழக முதல்வர்
திரு எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்
மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள்
மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்,கழக சட்டமன்ற உறுப்பினர்கள், போக்குவரத்துக் கழக அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மின்சார பேருந்தின் சிறப்பம்சங்கள்:
1) பேட்டரி மூலம் இயக்கப்படும் பேருந்து
2) கண்காணிப்பு கேமரா வசதி
3) ஜிபிஎஸ் வசதி
4) குளிர்சாதன வசதி
5) முதலுதவி பேட்டி
6) தானியங்கி கதவு வசதி
7) அவசர கால வழி
8)தீயணைப்பு கருவி
உள்ளிட்ட பல நவீன வசதிகளை கொண்டது.