12.01.2020- கரூர் வழியே செல்லும் அரசு பேருந்துகளை நிறுத்தி மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் மாவட்டம் தென்னிலை ஊராட்சிக்குட்பட்ட கரைப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு குளிர்சாதன விரைவு பேருந்தை நிறுத்தி ஆய்வு செய்த அமைச்சர் பேருந்துகளில் உள்ள வசதி குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தார்.